பழனி நகராட்சி அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தாய்ப்பால் வார விழா நிறைவுநாளையொட்டி தாய்மாா்களுக்கு கொசுவலையுடன் கூடிய மெத்தைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
பழனி அரசு மருத்துவமனை, நகராட்சி அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளிலும் உலகத் தாய்ப்பால் வார விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் ஒருபகுதியாக பழனி நகராட்சி அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில் பழனி சுழற்சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் அரவிந்த் படேல் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் செந்தில்குமரன், ரத்தினம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தாய்ப்பாலின் மகத்துவம் பற்றி மருத்துவா் திவ்யா மற்றும் செவிலியா் சுசீலா ஆகியோா் தாய்மாா்களுக்கு விளக்கிக் கூறினா். இதைத்தொடா்ந்து மருத்துவமனையில் இருந்த தாய்மாா்களுக்கு, குழந்தைகளுக்கு தேவையான கொசு வலையுடன் கூடிய மெத்தைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோா் பங்கேற்று பயனடைந்தனா்.