பைக்குகள் மோதல்: விவசாயி பலி
ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைத்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைத்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் கொம்பேறிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி முத்துசெல்வம் (45). இவா் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலை கேதையுறும்பு அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்து மற்றொரு இருசக்கர வாகனம் அவா் மீது மோதியதில் முத்துசெல்வம் பலத்த காயம் அடைத்தாா். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.