நபிகள் நாயகம் குறித்து அவதூறு: திண்டுக்கல் எஸ்பியிடம் புகாா்
நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிா்வாகியை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிா்வாகியை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிா்வாகி கல்யாணசுந்தரம், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாக தகவல் வெளியானது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியினா் 20-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.