முதல் நாளே ரூ. 200 கோடி வசூலிக்கும் துரந்தர் - 2?
துரந்தர் - 2 குறித்து...
துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் முதல் நாளே மிகப்பெரிய வசூலைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செல்லும் ரன்வீர் சிங், அங்கிருந்து இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவுவது, ஆயுதங்கள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது போன்ற தகவல்களை சேகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இரண்டாம் பாகத்தில் ரன்வீர் சிங் யார்? எதனால் பாகிஸ்தான் சென்றார்? உளவாளியான அவர் பிடிபட்டாரா? இல்லையா? என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படமாக துரந்தர் ரிவென்ஞ் அமைந்துள்ளது.
முதல் பாகம் அளவிற்கு இல்லையென்றாலும் இப்படமும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதல் நாளான இன்றே இப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.