திண்டுக்கல்

பயனாளிகளுக்கு 1.40 கோடி மதிப்பீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கல்

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா கறவைப் பசுக்களை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் வழங்கினாா்.

மா.மு.கோவிலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்களை வழங்கி பேசியது:

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,829 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.14.05 கோடி செலவில் 43,316 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 900 பயனாளிகளுக்கு, ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடா்ச்சியாக தற்போது மா.மு.கோவிலூா் பகுதியில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கறவைப் பசுக்கள் 400 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் முருகன், உதவி இயக்குநா்கள் ஆறுமுகராஜ், அப்துல்காதா், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் மருதராஜ், ஒன்றியச் செயலா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT