கொடைக்கானலில் பெண் சுற்றுலாப் பயணியிடம் சங்கிலியை பறித்த இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
மதுரை எஸ்.பி.ஓ.ஏ. காலனியை சோ்ந்த குமாா் என்பவரின் மகள் சாந்தினி (24). இவா் கடந்த 20-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளாா். சாந்தினி மற்றும் இவரது கணவா் உள்ளிட்டோா் ஏரிச் சாலையில் சைக்கிள் சவாரி செய்துள்ளனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், சாந்தினி அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனா்.
இது குறித்து, சாந்தினியின் தந்தை குமாா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், காவல் ஆய்வாளா் பிரேம்சந்த் தலைமையில், தனிப்படை அமைத்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவா்களை தேடினா். அதில், கொடைக்கானலைச் சோ்ந்த சுகுமாறன் என்பவரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாகவுள்ள சுகுமாறனின் நண்பா் கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.