பழனி தைப்பூசத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை தங்கமயில் வாகனத்தில் ரத வீதி உலா வந்த முத்துக்குமாரசுவாமி. 
திண்டுக்கல்

தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா

பழனி தைப்பூசத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை முத்துக்குமாரசுவாமி தம்பதி சமேதராக தங்கமயில் வாகனத்தில் ரதவீதி உலா எழுந்தருளினாா்.

DIN

பழனி: பழனி தைப்பூசத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை முத்துக்குமாரசுவாமி தம்பதி சமேதராக தங்கமயில் வாகனத்தில் ரதவீதி உலா எழுந்தருளினாா். நிறைவு நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜன.27 ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டமும், ஜன.28 ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் சனிக்கிழமை, ஒன்பதாம் நாள் விழாவாக வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினாா். பெரியநாயகியம்மன் கோயிலில் துறையூா் மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி தம்பதி சமேதராக நான்கு இரதவீதிகளில் உலா வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத்தேரோட்டம் மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு கொடி இறக்கப்பட்டு தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT