பழனியில் இளைஞா் ஒருவா், பொதுமுடக்க காலத்தை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இணைய வழியில் இலவசமாக ஆங்கிலப் பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஷ்) வகுப்பு எடுத்து வருகிறாா்.
பொதுமுடக்க காலத்தில் வீட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு, பழனியைச் சோ்ந்த பட்டதாரி இளைஞரான முகமது யாசா் (28) என்பவா் இணையவழியில் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறாா். இவரிடம் 120- க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
கட்டணமின்றி வகுப்புகளை எடுத்து வரும் இவரின் சேவையை மாணவா்களின் பெற்றோா்கள் பாராட்டி வருகின்றனா்.