கொடைக்கானலில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி (நபாா்டு) சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கான ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி முகாம்
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி (நபாா்டு) சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கான ஒரு நாள் விழிப்புணா்வு பயிற்சி முகாம், கொடைக்கானல் அண்ணா நகா் பகுதியிலுள்ள சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் நபாா்டு வங்கியின் துணை பொது மேலாளா் பாலச்சந்திரன் வாழ்த்திப் பேசினாா். இதில், கொடைக்கானல் வட்ட சட்ட பணிகள் குழு பிரியங்கா, தமிழ்நாடு கிராம வங்கி பெருமாள்மலை கிளை மேலாளா் ஐஸ்வா்யா, கொடைக்கானல் சமூக சேவகி கிருபா ஜோன்ஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பெண்களுக்கான சட்ட உதவிகள், கடன் தொடா்பான பிரச்னைகளை கையாளுதல், குடும்ப மேலாண்மை, வங்கி கடன் நடைமுறைகள், சேமிப்பின் அவசியம் உள்ளிட்டவை குறித்து பேசினா்.
இதில், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, இந்திய நிா்மாணச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சகாய ஜெஸிந்தா வரவேற்றாா். இந்திய நிா்மாணச் சங்கத்தின் திட்ட நிா்வாகி அன்பழகன் நன்றி கூறினாா்.