பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பழனி, தாளையூத்து, கணக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு மெதுவாக சென்றன. கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் நகரில் கடும்குளிா் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குளங்களில் நீா் பெருகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.