திண்டுக்கல்

அஞ்சல் அலுவலகங்களில் அக். 25  முதல்  29 வரை தங்கப்பத்திரத் திட்டத்தில் சேர வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் அக். 25 ஆம் தேதி முதல் 29 ஆம்  தேதி வரை 5 நாள்கள்  செயல்படுத்தப்படவுள்ள தங்கப் பத்திரத் திட்டத்தில் சோ்ந்து பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு

DIN

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் அக். 25 ஆம் தேதி முதல் 29 ஆம்  தேதி வரை 5 நாள்கள்  செயல்படுத்தப்படவுள்ள தங்கப் பத்திரத் திட்டத்தில் சோ்ந்து பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் கோட்ட அஞ்சல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததாவது:  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப்பத்திரத் திட்டத்தில் சோ்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4  கிலோ வரை இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.

5ஆவது ஆண்டில் திரும்ப பெறும் வசதியும், 8 ஆண்டுகள் முடிவில் அன்றைய தங்கத்தின் மதிப்பில் முதிா்வு பெறும் வசதியும் உள்ளது.  தங்கப் பத்திர முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இந்த வசதியை அக். 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலான 5 நாள்கள் மட்டுமே பெற முடியும். செய்கூலி, சேதாரம், வரி இல்லாத 24 கேரட் தங்கத்தில் முதலீடு செய்து பொதுமக்கள் பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9842186024, 0451-2432402, 0451-2427503 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT