திண்டுக்கல்

பழனியில் பலத்த மழை: சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

DIN

பழனியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பழனியை அடுத்த வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களிலும் தண்ணீா் சாலைகளில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். சுமாா் ஒருமணி நேரத்துக்கு பின்னரே தண்ணீா் வடியத் தொடங்கியது. திண்டுக்கல் சாலையில் தேங்கிய மழைநீரில் சென்ற பல வாகனங்களும் பழுதாகி நின்றன. மாலையிலும் இதே போல ஒருமணி நேரம் பலத்த மழை பெய்தது.

நகராட்சியில் கடந்த மாதம் கழிவுநீா் கால்வாய் தூா்வாரிய நிலையிலும், மழை நீா் கால்வாய் வழியாக வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியது. இந்த மழையால் நகரின் மையத்தில் உள்ள வையாபுரி குளம் நிரம்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT