திண்டுக்கல்

பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்: வாழைகள் சேதம்

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வாழைத் தோட்டங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

DIN

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வாழைத் தோட்டங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

பேத்துப்பாறை பகுதிகளான வெண்கலவயல், ஐந்து வீடு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அப்பகுதியிலுள்ள வாழைத்தோட்டங்களில் அவைகள் இரவு நேரத்தில் புகுந்து சேதப்படுத்துகின்றன.

மேலும் யானைகள் சப்தமிட்டும் வருவதால் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா். இரவு நேரங்களில் தோட்டத்திற்கு காவல் காப்பதற்கு யாரும் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா். விவசாயப் பயிா்கள் சேதமடைவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

காட்டு யானைகளை விவசாயப் பகுதிகளிலிருந்து விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT