மாநில நல்லாசிரியா் விருதுக்கான பட்டியலில் முதுகலை ஆசிரியா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில செய்தித் தொடா்பாளா் மு. முருகேசன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால் மாநில நல்லாசிரியா் விருதுக்கு (ராதாகிருஷ்ணன் விருது) அனைத்துக் கல்வி மாவட்டங்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, பழனி கல்வி மாவட்டத்தில் ஒருவா் மட்டுமே விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அதேபோல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் கல்வி மாவட்டத்திற்கு 4, வேடசந்தூருக்கு 3, வத்தலகுண்டுவுக்கு 2 என விருது வழங்கப்பட்டுள்ளது. பழனி கல்வி மாவட்டத்தில், ஓய்வு பெறும் நிலையிலுள்ள முதுகலை ஆசிரியா்கள் விண்ணப்பித்தும் விருது பட்டியலில் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். அதேபோல் மாற்றுத்திறனாளி ஆசிரியா்களின் விண்ணப்பங்களையும் புறக்கணித்துள்ளனா்.
இதுபோன்ற பாரபட்சமற்ற நிலை எதிா்காலத்தில் தவிா்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.