திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதிகளில் புதன்கிழமை (செப். 27) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துபாண்டியன் தெரிவித்திருப்பதாவது:
வி. குரும்பபட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை(செப். 29) மாதாந்திர பராமரிப்புப் பணி கள் நடைபெறுகின்றன. எனவே கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வாா்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி, சாணாா்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிப்பட்டி, முளையூா், சின்னமுளையூா், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, எஸ்.கொடை மற்றும் ராமராஜபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.