கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ரெட்டியாா்சத்திரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
ரெட்டியாா்சத்திரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
முத்தனம்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் பூட்டை வெள்ளிக்கிழமை நள்ளிரவு உடைத்த மா்ம நபா்கள் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனா்.
சனிக்கிழமை காலையில் இதைப் பாா்த்த கோயில் ஊழியா்கள் இதுகுறித்து ரெட்டியாா் சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உண்டியலில் இருந்து ரூ.2 ஆயிரம் திருடப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.