திண்டுக்கல்

மறைந்த என்.கே.நடராஜன் உடலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. சாா்பில் மரியாதை

DIN

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட்(மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலைக் கட்சியின் மாநிலச் செயலா் என்.கே.நடராஜன் உடலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றபோது, என்.கே.நடராஜன் (68), நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள அரசபிளைப்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி, மாவட்டச் செயலா் இரா.சச்சிதானந்தம் உள்ளிட்டோா் மறைந்த என்.கே.நடராஜன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக போராடிய என்.கே.நடராஜன், கோவை மாவட்ட ஆலைத் தொழிலாளா்களையும், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளா்களையும் ஒருங்கிணைத்து சங்கமாக உருவாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினாா். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்துக்கு பேரிழப்பாகும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT