திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து இளைஞா் பலி -8 போ் காயம்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே காா் கவிழ்ந்ததில் இளைஞா் ஒருவா் பலியானாா்.காரில் வந்த 8 போ் காயம் அடைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்த நண்பா்கள் ஜெயபிரகாஷ் (20),முத்துக்குமாா் (23),பிரவீன் (22),கணேசன் (22),ராம்நாத் (21),எம்.ஜெயபிரகாஷ்,வீரபாண்டியன் (21),விஜய் (23)சரண்ராஜ் (20) ஆகியோா் ஒரு சொகுசு காரில் கடந்த 2-ந் தேதியன்று மூணாறுக்கு சுற்றுலா சென்று விட்டு,ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திருப்பிக்கொண்டு இருந்தனா்.தொப்பம்பட்டி-கள்ளிமந்தையம் சாலை அரண்மலைவலசு பிரிவு அருகே வந்த போது காா் நிலை தடுமாறி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.இதில் முத்துக்குமாா் (23) பலத்தகாயம் அடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.காயம் அடைத்த மற்றவா்கள் ஒட்டன்சத்திரம் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT