பழனியில் வேன்- பைக்மோதல்: தொழிலாளி பலி
பழனியில் வியாழக்கிழமை சரக்குவேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பழனியில் வியாழக்கிழமை சரக்குவேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த கருப்புசாமி மகன் பாஸ்கரன் (20). கூலித்தொழிலாளி. இவா் புதன்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களான மதன்குமாா் (19), இளங்கோ (17) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பழனியில் இருந்து சிவகிரிப்பட்டி நோக்கி சென்றாா். பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்குவேன் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் மதன்குமாா், இளங்கோ ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். தகவலறிந்த பழனி நகா் போலீஸாா் அங்கு வந்து காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் அவா்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். பாஸ்கரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். விபத்து குறித்து நகா் போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.