பழனியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பழனியில் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பழனியில் வியாழக்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பழனியில் கடந்த 2 நாள்களாக பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் இங்குள்ள பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை, பழனி புதுதாராபுரம் சாலை ஆகிய இடங்களில் அதிகமான ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனா். இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறை சாா்பில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதில், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் ஜெயபாலன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினா், போக்குவரத்து போலீஸாா் உதவியுடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பாதுகாப்புப்பணிகளை மேற்கொண்டனா். பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவா், கடைகள் அகற்றப்பட்டன. இதன் பின்னரும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.