திண்டுக்கல்

தான் படித்த அரசுப் பள்ளியில் பழைமையான கட்டடத்தை சொந்த செலவில் சீரமைத்த முன்னாள் மாணவா்

கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா் பள்ளிக் கட்டிடத்தை ரூ.5 லட்சம் செலவில் சீரமைத்ததோடு உபகரணங்களையும் வழங்கினாா்.

DIN

கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா் பள்ளிக் கட்டிடத்தை ரூ.5 லட்சம் செலவில் சீரமைத்ததோடு உபகரணங்களையும் வழங்கினாா்.

இப்பள்ளியில், 1972-1975 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவரான சா்தாா் தற்போது, அமெரிக்காவில் தொழிலதிபராக உள்ளாா். இந்நிலையில், தான் படித்த அரசு பள்ளிலிருந்த பழைமையான கட்டடத்தை ரூ.5 லட்சம் செலவில் சீரமைத்தாா். மேலும் வகுப்பறைகளுக்குத் தேவையான 20 மேஜை மற்றும் நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றையும் தலைமையாசிரியா் (பொ) அமுதாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அப்போது, பள்ளியின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான கருப்பையா மற்றும் பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT