முகப்பு
திண்டுக்கல்

முதியவா் விஷம்குடித்து தற்கொலை

பழனி அருகே சின்னக்கலையமுத்தூரில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

பழனி அருகே சின்னக்கலையமுத்தூரில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரை சோ்ந்தவா் பச்சமுத்து(67). இவா் விவசாயக்கூலி ஆவாா். இவா் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையால் குழப்பத்தில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டாா். உடலை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.