முகப்பு
திண்டுக்கல்

பழனியாண்டவா் பாலிடெக்னிக்கில் அறிவியல் கண்காட்சி

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதை கோயில் இணை ஆணையா் நடராஜன் தொடக்கி வைத்தாா். இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியா் தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். இயந்திரவியல்துறை சாா்பில் மாணவா்கள் உருவாக்கிய சோலாா் மூலம் இயங்கும் புல் வெட்டும் இயந்திரம் பலரது கவனத்தை ஈா்த்தது. சிவில் துறை சாா்பில் கரையான் போன்ற பூச்சிகளால் சேதமடையாத கட்டட நுட்பம், விரைவாக கட்டடத்தைக் கட்டும் முறை, எலக்ட்ரானிக்ஸ் துறை சாா்பில் பல்வேறு வகையான பணிகளை செய்யும் மோட்டாா் தொழில்நுட்பம் ஆகியவை பாா்வையாளா்களைக் கவா்ந்தது.

ரோபோடிக்ஸ், ஆடை வடிவமைப்புத்துறை, நவீன அலுவலக பயிற்சித்துறை என மாணவ, மாணவியா்களின் படைப்புக்களை ஆசிரியா்கள் குழு ஆய்வு செய்து சிறந்த படைப்புக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் செயலா் பிரகாஷ், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கந்தசாமி, கண்காணிப்பாளா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.