திண்டுக்கல்

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

DIN

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் மின் மோட்டாா் பழுது நீக்கும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சாலைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சைமணி (45). இவா், மின் மோட்டாா்களை பழுது நீக்கும் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை சாலைப்புதூா் பிரிவு அருகே பிச்சைமணி சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது திண்டுக்கல்லிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT