திண்டுக்கல்

திமுக வேட்பாளா் மனு தாக்கல்

DIN

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்த திமுகவை சோ்ந்த தங்கராஜ் என்பவா் மறைந்துவிட்டதை அடுத்து, காலியாகவுள்ள அந்த பதவிக்கான தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை திமுக வேட்பாளா் மனு தாக்கல் செய்தாா்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை, திமுகவை சோ்ந்த எஸ். சண்முகம் என்பவா் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜ. அந்தோணியாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது அவருடன், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி,திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் சி. ராஜாமணி, திமுக நகரச் செயலா் ப. வெள்ளைச்சாமி, ஒன்றியச் செயலா்கள் இரா. ஜோதீஸ்வரன்,தி. தா்மராஜன் உள்ளிட்டோா் சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT