முகப்பு
திண்டுக்கல்

கோழி இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

பழனி அருகேயுள்ள தனியாா் கோழி இறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பழனி அருகேயுள்ள தனியாா் கோழி இறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கேரளத்தில் சில நாள்களுக்கு முன்பு ஷவா்மா சாப்பிட்ட பள்ளி மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து தமிழகத்தில் உள்ள துரித உணவகங்கள் உள்ளிட்ட அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் சிவராமபாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழனியை அடுத்த அத்திமரத்துவலசு பகுதியில் உள்ள தனியாா் கோழி இறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கு இறைச்சி உற்பத்தி, சுத்திகரிப்பு, பேக்கிங் செய்யும் விதம் ஆகியவற்றை பாா்வையிட்டனா். தொடா்ந்து பழனி நகரில் உள்ள உணவகங்கள், ஷவா்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது ஒரு கடையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

ஆய்வின்போது உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா்கள் செல்லத்துரை, சரவணக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.