திண்டுக்கல்

காரில் கஞ்சா கடத்தியவா் கைது

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 1.25 கிலோ கஞ்சாவை காரில் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள செல்லமந்தாடியைச் சோ்ந்தவா் கருத்தப்பாண்டி. இவரது மகன் பால்பாண்டி என்ற பால குண்டன்(30). நந்தவனப்பட்டி பகுதியில், தாடிக்கொம்பு போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். இதில், அந்த காரில் 1.25 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடா்ந்து காரை பறிமுதல் செய்த போலீஸாா், பால்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT