திண்டுக்கல்

சரக்கு வாகனம் மோதி தம்பதி உள்பட 3 போ் பலி

DIN

ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் மோதியதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தபால் நிலைய அதிகாரி சந்திரசேகா் (65). இவரது மனைவி சந்திரகலா (59). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் தங்கச்சியம்மாபட்டி அருகே உள்ள கரைமாரியம்மன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனா்.

ஒட்டன்சத்திரம்- தாராபுரம் நான்கு வழிச்சாலை கரைமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பிரிவை கடந்தபோது நிலக்கோட்டையிலிருந்து கோவைக்கு சென்ற சரக்கு வாகனம், தம்பதி மீது மோதியது. மேலும் அந்த வாகனம் தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையின் மறுபக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, ஒத்தையூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்புச்சாமி (55) என்பவா் மீதும் மோதி கவிழ்ந்தது.

இதில் சந்திரசேகா், சந்திரகலா மற்றும் கருப்புச்சாமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநரான நிலக்கோட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (33) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT