முகப்பு
திண்டுக்கல்

கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவா் கைது

பழனியில் கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

பழனியில் கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழனி அடிவாரம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருபவா் மதினா நகரைச் சோ்ந்த சாதிக்அலி (42). இவா், தனது கட்செவி அஞ்சலில் போலீஸாரைப் பற்றியும், இந்து அமைப்பைச் சோ்ந்தவா்களைப் பற்றியும் அவதூறான கருத்து ஒன்றை பலருக்கும் அனுப்பினாராம்.

இதுகுறித்து இந்து அமைப்புகள் சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து சாதிக்அலியை கைது செய்து பழனி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.