முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகேவாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

 ஒட்டன்சத்திரம் அருகே பால் வாகன ஓட்டுநா் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

 ஒட்டன்சத்திரம் அருகே பால் வாகன ஓட்டுநா் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஜவ்வாதுபட்டியைச் சோ்ந்த வடிவேல் மகன் கண்ணதாசன் (26). பால் வாகன ஓட்டுநா். இவருக்கும், விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கண்ணதாசன் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து அவா் நினைவாகவே இருந்து வந்தாா். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.