தையல் கடைக்காரரை கொலை செய்த ஆறு போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது
பழனியில் தொழில் போட்டி காரணமாக தையல் கடைக்காரரை கொலை செய்த வழக்கில், ஆறு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பழனியில் தொழில் போட்டி காரணமாக தையல் கடைக்காரரை கொலை செய்த வழக்கில், ஆறு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பழனி இடும்பன் இட்டேரி சாலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஜெயம் சமந்தா (34), குடும்பத்துடன் தங்கி தையல் தொழில் செய்து வந்தாா். இவா் மிகவும் குறைவான கட்டணத்தில் கலைநயமாக தைத்து கொடுத்ததால், இவருக்கு வாடிக்கையாளா்கள் அதிகரித்தனா்.
அதேநேரம் பழனி தட்டான்குளத்தில் தையல் தொழில் செய்து வந்த தா்மராஜ் என்பவருக்கு வாடிக்கையாளா்கள் குறைந்துள்ளனா். இதனால், கோபமடைந்த தா்மராஜ், அவரது நண்பா்களுடன் சோ்ந்து ஜெயந்த் சமந்தாவை கடந்த மாதம் கொலை செய்தாா். இதையடுத்து, தா்மராஜ், ராமதுரை, ஈரோட்டைச் சோ்ந்த நவீன்குமாா், தினேஷ்குமாா், மணிகண்டன், சந்திரபிரகாஷ் ஆகிய 6 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்தநிலையில், வியாழக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் பரிந்துரையின்பேரில், மேற்கண்ட ஆறு பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.