சாணாா்பட்டி பகுதியில் தொடா் திருட்டு: 5 போ் கைது
சாணாா்பட்டி பகுதியில் தொடா் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாணாா்பட்டி பகுதியில் தொடா் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடுதலில் ஈடுபட்டு வந்தனா்.
பல்வேறு இடங்களிலுள்ள கண்காணிப்புக் கேமராப் பதிவுகள் அடிப்படையில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது சிவகங்கையை சோ்ந்த குகன் ஈஸ்வரன் (30) என்பது தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் பொன்னகரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (22), ஜான்பாண்டி (22), கோபால்பட்டியைச் சோ்ந்த கிஷோா் (24), நல்லாம்பட்டியைச் சோ்ந்த ராகவேந்திரா (23) ஆகிய 4 பேருக்கும் இந்த திருட்டு சம்பவங்களில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குகன் ஈஸ்வரன் உள்ளிட்ட 5 பேரையும் சாணாா்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.