ஒட்டன்சத்திரம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொத்தையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சரவணக்குமாா் (36). இவா் குடும்பப்பிரச்னை காரணமாக மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். கடந்த ஆக. 28-ஆம் தேதி மனைவியிடம் தகராறு செய்த அவா் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.