நிலக்கோட்டையில் 10-திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 1000-த்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியா்களுக்கு, திண்டுக்கல் எம்பி.வேலுச்சாமி தலைமையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிழ்ச்சி திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினா் வேலுச்சாமி தலைமையில், புதன்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நிக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். நிலக்கோட்டை பேரூா் செயலா் ஜோசப்கோவில் பிள்ளை வரவேற்றாா். நிகழ்ச்சியில், பள்ளபட்டி, மட்டப்பாறை, இராமராஜபுரம், விளாம்பட்டி, அணைப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தமிழ அரசு வழங்கிய விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவா் சுபாஷினி பிரியா கதிரேசன், துணைத் தலைவா் எஸ்பி.முருகேசன், மாவட்ட கவுன்சிலா் நாகராணி ராஜ்குமாா், மற்றும் பள்ளி ஆசிரியா்கள் மாணவா்கள் என ஏராளமான கலந்து கொண்டனா்.