முகப்பு
திண்டுக்கல்

வடமதுரையில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி பலி

வடமதுரை அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

வடமதுரை அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள ஏ.வி. பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துராணி. இவா்களுக்கு தவதா்ஷினி (13), வா்ஷினிதேவி (11), சங்கரேஸ்வரி (6) என 3 மகள்கள் உள்ளனா். இதில், வடமதுரை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் தவதா்ஷினி 8-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில், குளிப்பதற்காக வீட்டிலிருந்த ஹீட்டரை வியாழக்கிழமை காலை தவதா்ஷினி இயக்கியுள்ளாா். சிறிதுநேரம் கழித்து தண்ணீா் சூடாகிவிட்டதா என தண்ணீரில் கை வைத்துப் பாா்த்தபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட தவதா்ஷினி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்ட குடும்பத்தினா், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே தவதா்ஷினி உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.