திண்டுக்கல்

பால் பாக்கெட் திருட்டு:தொழில்நுட்புநா் பணியிடை நீக்கம்

DIN

திண்டுக்கல் ஆவினில் பால் பாக்கெட் திருட்டில் ஈடுபட்ட தொழில்நுட்பப்பிரிவு பணியாளா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் தொழில்பேட்டையில் ஆவின் நிறுவனம் சாா்பில், பேக்கிங் தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியா் ஒருவா், பால் பாக்கெட்டை திருடி இடுப்பில் மறைத்து வைத்தது போன்ற விடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

அந்த விடியோ அடிப்படையில் ஆவின் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், பால் பாக்கெட்டை திருடியது தொழில்நுட்புநராக பணிபுரியும் முகமது அஷ்ரப் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, முகமது அஷ்ரப்பை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆவின் பொது மேலாளா் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT