பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நபா் கைது
மாநிலம் முழுவதும் பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையவா் பழனியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
மாநிலம் முழுவதும் பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையவா் பழனியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
பழனியை அடுத்த கீரனூரில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் ரோந்துப்பணி மேற்கொண்டனா். அப்போது புதுக்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் என்பவரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா் பழனியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உரக்கடையில் பணத்தைத் திருடியது உள்ளிட்ட மாநிலம் முழுவதும் திருட்டு, கொள்ளை என நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.