திண்டுக்கல்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநிலச் செயலா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். பழனி வட்டக் கிளைத் தலைவா் மகுடபதி, பொருளாளா் ஏசடியான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதி நிறுத்தப்பட்டதால் கிராமங்களில் உள்ள பணியாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நிறுத்தப்பட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஊரக வளா்ச்சித்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT