திண்டுக்கல்

பழனி தூய்மை பயன்பாட்டுக்கு புதிய மின்கல வாகனங்கள்

பழனியில் நகரத் தூய்மை பணிக்காக ரூ. 20 லட்சத்தில் புதிதாக வாங்கப்டட்ட மின்கல வாகனங்களை, தூய்மை பணியாளா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பழனியில் நகரத் தூய்மை பணிக்காக ரூ. 20 லட்சத்தில் புதிதாக வாங்கப்டட்ட மின்கல வாகனங்களை, தூய்மை பணியாளா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகா்மன்ற தலைவா் உமா மகேஸ்வரி தலைமை வகித்து தூய்மை பணியாளா்களுக்கு வாகனங்களின் சாவியை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தாா்.

நகராட்சி ஆணையா் ராமா் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, நகராட்சி பொறியாளா் வெற்றிச்செல்வி, நகா்நல அலுவலா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்த வாகனங்கள் வாா்டுகளுக்குள் எளிதாக சென்று குப்பைகள் அள்ள பயன்படுவதோடு, சுற்றுச்சூழல் தூய்மைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் நகராட்சி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்த நகராட்சி பணியாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் முருகபாண்டியன், வீரமணி, நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT