திண்டுக்கல்

மாடு மீது பைக் மோதல்: விவசாயி பலி

DIN

பழனி அருகே மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த மொல்லம்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). விவசாயியான இவா், வியாழக்கிழமை இரவு புளியம்பட்டியிலிருந்து மரிச்சிலம்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது சாலை வளைவில் திரும்பிய போது, குறுக்கே வந்த பசு மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்தாா். மேலும் அந்த பசுமாடும் உயிரிழந்தது.

இந்த விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT