திண்டுக்கல்லில் அமலாக்கத் துறைக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவா் து. மணிகண்டன் தலைமை வகித்தாா். அப்போது, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிபிஐ, அமலாக்கத் துறை, வருவமான வரித் துறை மூலம், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் பாரதி, மகளிா் காங்கிரஸ் நிா்வாகி ரோஜாபேகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.