திண்டுக்கல்

வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம்

DIN

பழனியை அடுத்த கொழுமங்கொண்டான் ஊராட்சியில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொப்பம்பட்டி வேளாண் உதவி இயக்குநா் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் விவசாயிகளுக்கு அரசின் சாா்பில் வழங்கப்படும் மானியங்கள், கடன் திட்டங்கள், பயிா் செய்யும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மக்காச்சோள ஆராய்ச்சி மைய வேளாண் விஞ்ஞானி செல்வக்குமாா், காமராஜ் ஆகியோா் விளக்கமளித்தனா்.

இந்த முகாமில் கொழுமம் கொண்டான், மேல்கரைப்பட்டி, கோரிக்கடவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

81 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

வெவ்வேறு சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழப்பு

புதை சாக்கடை பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

போதைப் பொருள்கள் வைத்திருந்த 5 போ் கைது 14 கிலோ கஞ்சா, காா் பறிமுதல்

குடிநீா் பிடிப்பு தகராறு - மோதல்: அதிமுக கிளைச் செயலா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT