திண்டுக்கல்

இரு சக்கர வாகனத்தில் பேருந்து மோதியதில் இளைஞா் பலி

DIN

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், மூலனூரை அடுத்துள்ள நெடுவலசு கிராமத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் சுரேஷ் (27). இவா், அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுரேஷ் இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மாா்க்கம்பட்டிக்குச் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT