திண்டுக்கல்

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்களுக்கு விருது

ஒட்டன்சத்திரத்தில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

DIN

ஒட்டன்சத்திரத்தில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், ஒட்டன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் பயிற்சி மைய அலுவலகக் கட்டடத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நாசருதீன் தலைமை வகித்தாா். பழனி மாவட்டக் கல்வி அலுவலா் (பொறுப்பு) சண்முகநாதன் முன்னிலை வகித்தாா்.

ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் முருகேசன், ஒட்டன்சத்திரம் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் இளங்கோ ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.திண்டுக்கல் மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மு.செளந்தரராஜ் என்.எஸ்.எஸ். அறிக்கையை சமா்ப்பித்தாா்.

மாவட்ட அளவில் சிறந்த நாட்டு நலப்பணி அலுவலா் சரவணன், திண்டுக்கல் கல்வி மாவட்ட அளவில் சிறந்த அலுவலா்கள் சேதுராமன், தீபா, பழனி கல்வி மாவட்ட அலுவலா்கள் பாண்டிகுமரன், காா்த்திக் ஆகியோருக்கு விருது, பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

முன்னதாக ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றாா். இறுதியில் பரிமளா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT