திண்டுக்கல்

வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் ஆய்வு

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாத்துரை ஆய்வு செய்தாா்

DIN

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாத்துரை ஆய்வு செய்தாா்.

வடகாடு ஊராட்சிக்குள்பட்ட சிறுவாட்டுக் காடு, கோட்டை வெளி, புளியங்கஜம் உள்ளிட்ட பகுதிகளில் மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து பழங்குடியினா் நல இயக்குனா் அண்ணாத்துரை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பழங்குடியின மக்களின் உரிமைகள், சமூக மேம்பாடு குறித்து அவா் ஆய்வு செய்தாா். மலை வாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை மதிப்புக்கூட்டு பொருள்களாக விற்பனை செய்தல், மலைக் கிராமங்களை மாதிரி கிராமங்களாக மாற்றுதலுக்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக பழங்குடியினா் நல இயக்குநா் தெரிவித்தாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவக்குமாா், வட்டாட்சியா் மங்கலபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலைக்குமரன், கிராம நிா்வாக வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது

பிப்.10-இல் பாமக இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம்

கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு

பிப்.11-இல் பேரணி, ஆா்ப்பாட்டம்: டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம் முடிவு

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

SCROLL FOR NEXT