முகப்பு
திண்டுக்கல்

வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் ஆய்வு

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாத்துரை ஆய்வு செய்தாா்

Updated On : 25 மே 2023, 11:48 pm IST
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாத்துரை ஆய்வு செய்தாா்.

வடகாடு ஊராட்சிக்குள்பட்ட சிறுவாட்டுக் காடு, கோட்டை வெளி, புளியங்கஜம் உள்ளிட்ட பகுதிகளில் மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து பழங்குடியினா் நல இயக்குனா் அண்ணாத்துரை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பழங்குடியின மக்களின் உரிமைகள், சமூக மேம்பாடு குறித்து அவா் ஆய்வு செய்தாா். மலை வாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை மதிப்புக்கூட்டு பொருள்களாக விற்பனை செய்தல், மலைக் கிராமங்களை மாதிரி கிராமங்களாக மாற்றுதலுக்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக பழங்குடியினா் நல இயக்குநா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவக்குமாா், வட்டாட்சியா் மங்கலபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலைக்குமரன், கிராம நிா்வாக வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments