திண்டுக்கல்

தென் மாவட்டங்களில் ரூ.21,783 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகள்: அமைச்சா் கே.என்.நேரு

DIN

தென் மாவட்டங்களில் ரூ.21,783 கோடியில் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருதாக நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,368 கோடியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,422 குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை கொல்லப்பட்டி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தாா்.

விழாவில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல்துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்து கொண்டு கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசியதாவது:

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்தப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்காக ரூ.24 ஆயிரம் கோடி நிதி பெறப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க ரூ.21,783 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது:

ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், பழனி ஆகிய 3 நகராட்சி பகுதிகளிலும் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றாா்.

உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

ஒட்டன்சத்திரம், பழனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்த ரூ.930 கோடி, ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா், வடமதுரை, திண்டுக்கல் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை செயல்படுத்த ரூ.512.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றாா்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வரவேற்றாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.வேலுச்சாமி, கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் செ.ஜோதிமணி, பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ச.காந்திராஜன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளா் வெ.ரகுபதி, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளா் பா.சக்திவேல், ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் இரா.ஜோதீஸ்வரன், தெற்கு ஒன்றியச் செயலாளா் தி.தா்மராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT