பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யோகாசனப் பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். 
திண்டுக்கல்

மாணவ, மாணவிகளுக்கு யோகாசன விழிப்புணா்வுப் பயிற்சி

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகாசன விழிப்புணா்வு பயிற்சி முகாமில் சுமாா் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

DIN

பழனி: பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற யோகாசன விழிப்புணா்வு பயிற்சி முகாமில் சுமாா் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பழனி தனியாா் திருமண மண்டபத்தில் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மூன்று நாள் யோகாசனப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. பயிற்சி முகாமின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை பழனி கல்வி மாவட்ட அளவில் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

சிவாலயா யோகாசனப் பள்ளி மாணவா்கள் பயிற்சி அளித்தனா். யோகா ஆசிரியா் சிவக்குமாா், அரிமா சங்க நிா்வாகி பாபு ஆகியோா் மாணவா்களுக்கு யோகாசனத்தின் பயன்கள், அதன் சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

இந்த முகாமில் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் ரவிச்சந்திரன், சாய் லதாராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT