திண்டுக்கல்

குடும்பத்துடன் போராட்டம்: உணவக உரிமையாளா் கைது

பழனியில் பேருந்தை மறித்து, குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட உணவக உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

DIN


பழனி: பழனியில் பேருந்தை மறித்து, குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட உணவக உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

பழனி ரயிலடி சாலையில் ஈஸ்வரன் என்பவா் உணவகம் நடத்தி வருகிறாா். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இந்த உணவகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், பழனி நகா் போலீஸாா் டிஎஸ்பி சரவணன் தலைமையில் சென்று உணவகத்தில் இருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ததோடு, கடையைப் பூட்டி சீல் வைத்து விட்டுச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, இரண்டு நாள்களாகியும் வழக்குப் பதிவும் செய்யாமல், கடையையும்

திறக்கவிடாமல் தங்களை அலைக்கழிப்பதாகத் தெரிவித்து ஈஸ்வரன் திங்கள்கிழமை தனது குடும்பத்தினா், உணவக ஊழியா்களுடன் பேருந்து நிலையம் முன் அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டாா். அப்போது அவா்கள் போலீஸாரின் நடவடிக்கை குறித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். அங்கு வந்த போலீஸாா் ஈஸ்வரனையும், அவரது குடும்பத்தினரையும் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT