திண்டுக்கல்

சிறப்புப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

அகரம் கோயில் திருவிழாவுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு கட்டாய வசூல் நடத்தியதற்கு பாஜக சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

DIN

திண்டுக்கல்: அகரம் கோயில் திருவிழாவுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு கட்டாய வசூல் நடத்தியதற்கு பாஜக சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்த அகரம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு திண்டுக்கல், வேடசந்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் இருந்து அகரம் செல்வதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், அகரம்

பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டாய வசூல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

இதுதொடா்பாக, பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் கூறியதாவது:

திண்டுக்கல்லில் இருந்து அகரம் செல்ல ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், திருவிழாவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவதாகக் கூறி, அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.15 கட்டணம் வசூலித்தது.

இதேபோல, தேசிய நெடுஞ்சாலையை வாகனப் பாதுகாப்பு இடமாக மாற்றிய திமுகவினா், அங்கு நிறுத்தப்பட்ட பக்தா்களின் வாகனங்களுக்கும் கட்டாய வசூல் நடத்தினா். கோயிலுக்குச் சென்ற பக்தா்களிடம், கூடுதல் கட்டணம் வசூலித்த போக்குவரத்துத் துறையையும், கட்டாய வசூலில் ஈடுபட்ட திமுகவினரையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT