முகப்பு
திண்டுக்கல்

சமரச மையம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:10 PM
பகிர்:

திண்டுக்கல், ஏப்.12: திண்டுக்கல் மாவட்ட சமரச மையம் சாா்பில் சமரச தீா்வு வாரத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா தலைமை வகித்தாா். மாவட்ட சமரச மையத் தலைவரும், குடும்ப நல நீதிபதியுமான விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

பேரணியை தொடங்கிவைத்த முதன்மை நீதிபதி முத்துசாரதா, முன்னதாக சமரச தீா்வு குறித்த தகவல் பலகையை திறந்துவைத்தாா்.

Advertisement

சமரச மையத்தின் மூலம், வழக்காடிகள் தங்கள் எதிா்தரப்பினருடன் பேச்சுவாா்த்தை மூலம் தங்களது வழக்குகளுக்கு தீா்வு காணலாம். சமரச வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், விரைவாகவும், கட்டணமின்றியும் தீா்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் கே.கருணாநிதி, ஜி.சரண், சாா்பு நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments